மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமாவில் இளம் தாய்
சேலம்:
தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒரு இளம் பெண் கோமாவில் தள்ளப்பட்டுள்ளார்.இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
சேலத்தையடுத்த காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகவுண்டர்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரதுமனைவி அங்கம்மாள் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில் இவர்களுக்குஇரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
அப்போது தாயும் குழந்தையும் நலமுடன் இருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன்நடந்தது. அப்போது மருத்துவர்கள் தவறான முறையில் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப்பெண் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து 25 நாட்களாக அவர் கோமாவிலேயே உள்ளார்.
இது குறித்து அந்தப் பெண்ணில் கணவர் செந்தில் குமார் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனு விவரம்:
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் என்னை அழைத்த டாக்டர் ராவ், பத்மா ராவ், ராஷ்மிராவ், ராஜசேகர் ஆகியோர், என் மனைவிக்கு அனஸ்தீசியா மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும்இதனால் அவள் சுயநினைவுக்குத் திரும்பவில்லை என்றும் கூறினர்.
இதை ஒரு விபத்தாகக் கருதும்படி என்னிடம் கூறிய டாக்டர்கள், 48 மணி நேரத்தில் சரி செய்து என் மனைவியைசுய நினைவுக்குக் கொண்டு வந்து விடுவதாகக் கூறினர். ஆனால், 25 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அவளுக்குசுய நினைவு வரவில்லை. கோமாவில் தான் தொடர்ந்து இருக்கிறார்.
டாக்டர்களிடம் கேட்டபோது, நினைவு திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம், நினைவு திரும்பாமல் கூடப் போகலாம்என்று கூறிவிட்டனர்
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார் செந்தில் குமார்.
இது குறித்து டாக்டர் பத்மா ராவ் கூறுகையில், அங்கம்மாளின் இதயம், நுரையீரல் இயங்குகிறது. மூளைஇயங்கவில்லை. இனி அவருக்கு சுய நினைவு திரும்பாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதற்கு அனஸ்தீசியாதந்தபோது ஏற்பட்ட விபத்து தான் காரணம். இதற்காக மருத்துவமனை மிகவும் வருந்துகிறது என்றார்.
குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அந்தக் குழந்தைக்கு பால் கூட ஊட்ட முடியாமல் சுய நினைவின்றி படுக்கையில்கிடக்கிறார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications