For Daily Alerts
Just In
மகாராஷ்டிர கவர்னர் பதவி: அலெக்ஸான்டர் திடீர் ராஜினாமா
மும்பை:
மகாராஷ்டிர ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டதாகத் தெரிகிறது.
உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் அவரைத் தான் முதலில் நிறுத்த பிரதமர் வாஜ்பாய் திட்டமிடிருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புகாரணமாக அவரை பா.ஜ.க. கடைசி நேரத்தில் கை கழுவியது.
இந்த விவகாரம் குறித்து அலெக்சாண்டர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால், இப்போது திடீரெனராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆளுநராக உள்ளார். தமிழகத்திலும் ஆளுநராக இருந்தஅலெக்சாண்டர் முன்பு இந்தியாவுக்கான தூதராக அமெரிக்காவில் பணியாற்றியவர்.
தனது ராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் அவர் சமர்பித்தார்.
Comments
Story first published: Tuesday, July 9, 2002, 5:30 [IST]