அன்னதான திட்டம்: ஒரே நாளில் ரூ.16 லட்சம் நன்கொடை
சென்னை:
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள அன்னதானத் திட்டத்திற்கு நேற்று மட்டும் ரூ.15 லட்சத்து 66 ஆயிரத்து511 நன்கொடையாகக் குவிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள 63 கோவில்களில் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும் தன்னுடைய மாதச் சம்பளம் முழுவதையும் அன்னதானத் திட்டத்திற்கே அளிப்பதாகவும் ஜெயலலிதாஅறிவித்தார்.
இதையடுத்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இந்த அன்னதானத் திட்டத்திற்கு ஏராளமான நன்கொடை குவிந்துவருகிறது.
இந்நிலையில் நேற்று மட்டும் 15 லட்சத்து 66 ஆயிரத்து 511 ரூபாய் நன்கொடையாகக் குவிந்தது. அதிமுகஎம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரமுகர்கள் நேற்று இந்தத் தொகைக்கான காசோலைகளை ஜெயலலிதாவிடம்வழங்கினர்.
முன்னாள் எம்.பியான ஆர். காமராஜ் வித்தியாசமான முறையில் நன்கொடை வசூலித்து வந்திருந்தார். மாவட்டஅதிமுக கூட்டங்களில் அவருக்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர்களிடமிருந்து, சால்வைக்குப் பதிலாகஅன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை கொடுங்கள் என்று கேட்டு வசூலித்தே ரூ.3,33,333 தொகையைப்பெற்றிருந்தார்.
இவர் தவிர பி.எச். பாண்டியன், கே. மலைச்சாமி, தினகரன் உள்ளிட்ட 15 எம்.பிக்களும் தலா ரூ.50 ஆயிரத்தைஅன்னதானத் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.












Click it and Unblock the Notifications