சென்னையில் மீண்டும் தொடர் கொள்ளைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சொல்லி வைத்தாற்போல்தினந்தோறும் இரவு நேரங்களில் கொள்ளைகள் நடந்து வந்தன.

இது தொடர்பாக சில கொள்ளையர்களை மட்டும் போலீசார் கைது செய்து பணம், நகை மற்றும் பொருட்களைமீட்டனர்.

இதன் பின்னர் அவ்வப்போது கொள்ளைச் சம்பவங்கள் நடந்த போதிலும் இவை ஏதோ வழக்கமாக நடக்கும்செயல்கள் தான் என்று மக்களும் எண்ண ஆரம்பித்து விட்டார்கள் போலும்.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

சென்னை துரைப்பாக்கத்தில் "புட் வோர்ல்டு" என்ற பிரபலமான தனியார் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.

இன்று காலை அதன் ஊழியர்கள் அலுவலகத்தைத் திறந்து பார்த்த போது, அங்கிருந்து ரூ.1 லட்சம் வரை பணம்கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். துரைப்பாக்கம்போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த ஓரிரு நாட்களில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் ரூ.75,000 மதிப்புள்ளநகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+