பொடா கைதுகள்: மத்திய அரசு தலையிட மதிமுக கோரிக்கை
டெல்லி:
தமிழகத்தில் மதிமுகவினர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொருளாளரும் மத்திய அமைச்சருமான மு.கண்ணப்பன் கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தச் சட்டத்தை உள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, இது தவறாகப் பயன்படுத்தப்படாதுஎன்று உறுதியளித்தார்.
ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு தானாகவே இதில் தலையிட்டு தமிழக அரசைத் தடுக்க வேண்டும் என மதிமுக எதிர்பார்க்கிறது என்றார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியைக் கேட்டு கெஞ்ச மாட்டோம் என முன்னதாக மதிமுக கூறியுள்ளது.
மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக முக்கிய கட்சியாகும். பா.ஜ.கவுக்கு தொல்லைவந்தபோதெல்லாம் மிக உதவிகரமாக இருந்துள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications