இம்மாத இறுதிக்குள் பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு முடிவுகள்
சென்னை:
சமீபத்தில் நடந்த பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. உடனடி தேர்வுகளுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள்வெளியிடப்படும் என்று தேர்வுத்தறை இயக்குனர் பழனிவேலு கூறினார்.
கடந்த ஆண்டு (2001-02) பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் ஓரிரு பாடங்களில்தோல்வியடைந்தவர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டு முழுவதும் வீணாகி விடாமல் இருப்பதற்காக உடனடி மறு தேர்வுதிட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி பிளஸ் டூவில் 43 ஆயிரம் பேரும், எஸ்.எஸ்.எல்.சியில் 82 ஆயிரம் பேரும், மெட்ரிக்குலேசனில் 5ஆயிரம் பேரும் சமீபத்தில் மறு தேர்வுகளை எழுதினர்.
இந்தத் தேர்வுகளுக்கான விடைத் தாள் திருத்தும் பணி தற்போது வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. பிளஸ் டூவிடைத் தாள்கள் 3 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் மெட்ரிக்குலேசன் விடைத் தாள்கள் 6 மையங்களிலும்திருத்தப்பட்டு வருகின்றன.
வரும் 15ம் தேதிக்குள் இப்பணி முடிந்து விடும் என்றும் அதன் பிறகு மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு,வரும் 29ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பழனிவேலு நேற்று நிருபர்களிடம்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications