ஜெ.வுக்கு எதிரான வழக்குகள்: தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிப்பு
சென்னை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைவிசாரித்து வரும் தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காகவே அப்போதைய திமுக அரசு 6 தனிநீதிமன்றங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கையும் வெகுவாகக்குறைந்திருந்தன. இதையடுத்து கடந்த ஆண்டே 3 தனி நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
மீதமுள்ள 3 நீதிமன்றங்களின் காலம் கடந்த ஜூன் 30ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. ஜெயலலிதாவுக்குஎதிரான ஸ்பிக் வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இந்த 3 தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நீதிமன்றம் வரும் ஜூலை 31ம் தேதி வரை செயல்படும் என்றும் 2வது மற்றும் 3வது நீதிமன்றங்களின்காலம் அடுத்த ஆண்டு (2003) ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications