ஜெ.வுக்கு எதிரான வழக்குகள்: தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிப்பு
சென்னை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைவிசாரித்து வரும் தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காகவே அப்போதைய திமுக அரசு 6 தனிநீதிமன்றங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கையும் வெகுவாகக்குறைந்திருந்தன. இதையடுத்து கடந்த ஆண்டே 3 தனி நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
மீதமுள்ள 3 நீதிமன்றங்களின் காலம் கடந்த ஜூன் 30ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. ஜெயலலிதாவுக்குஎதிரான ஸ்பிக் வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இந்த 3 தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நீதிமன்றம் வரும் ஜூலை 31ம் தேதி வரை செயல்படும் என்றும் 2வது மற்றும் 3வது நீதிமன்றங்களின்காலம் அடுத்த ஆண்டு (2003) ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.