துணை ஜனாதிபதி தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல்
டெல்லி:
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
இப்போதுள்ள துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்துஅடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
வேட்பு மனுத் தாக்கலும் நாளை தொடங்குகிறது. இம் மாதம் 24ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். 25ம் தேதிமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 27ம் தேதி கடைசி நாள்.
போட்டி இருந்தால் அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டி நிச்சயம் என்றாகிவிட்டது. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைரோன் சிங்செகாவத் நிறுத்தப்பட உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை:
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய தேர்தல் கமிஷன்இன்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ தலைமையில் டெல்லியில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.