காவிரிப் பிரச்சனை: கர்நாடக சட்டசபையில் மோதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக சட்டசபையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.-ஜனதா தளம்கட்சிகளுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடந்தது.

தமிழகத்திற்குக் காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று சமீபத்தில் கர்நாடக அரசுக்கு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டார்.

ஆனால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்று கடந்த வார இறுதியில் கர்நாடக அமைச்சரவைமுடிவெடுத்தது. மறுநாளே இது தொடர்பாக வாஜ்பாய்க்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடிதமும் எழுதி விட்டார்.

இந்நிலையில் நேற்று கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டசபையில் விரிவாகவும்விளக்கமாகவும் வெளியிட வேண்டும் என்று முக்கிய எதிர்க் கட்சிகளான பா.ஜ.கவும் ஜனதா தளமும் கேட்டுக்கொண்டன.

ஆனால் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் சட்டசபையில் பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாதுஎன்று கிருஷ்ணா கூறினார்.

இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் கர்நாடக அரசைத் தாக்கிப் பேசத் தொடங்கவே, ஆளுங்கட்சி உறுப்பினர்களும்பதிலுக்குக் கத்த ஆரம்பித்தனர்.

இதனால் சட்டசபையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+