மதிமுகவினர் கைதுக்கு இளங்கோவன் ஆதரவு: பொடாவுக்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மதிமுகவினரை கைது செய்தது சரி தான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார். ஆனால், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் வைகோவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்ததும் சரியான நடவடிக்கைதான. அவர்கள் மிக வெளிப்படையாகவே புலிகளை ஆதரித்து வருகிறார். இந்த நடவடிக்கையை மாநில அரசு முன்பேஎடுத்திருக்க வேண்டும். தாமதமாகச் செய்தாலும் சரியான நடவடிக்கையைத் தான் எடுத்துள்ளார்கள்.

ஆனால், இதற்கு பொடா சட்டத்தைப் பயன்படுத்தியதைத் தான் ஏற்க முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போதுஇதை பயன்படுத்த வேண்டியதில்லை.

இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறது. இச் சட்டத்தை அரசியல் எதிரிகளை ஒடுக்கவும்சிறுபான்மையினருக்கு எதிராகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் அதை எதிர்த்தோம். இப்போதும் எதிர்க்கிறோம்.

மத்திய அரசில் அமைச்சர்களாக உள்ள மதிமுகவின் இரு அமைச்சர்களும் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தவேண்டும். புலிகள் இயக்கம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தை இரு அமைச்சர்களும் ஆதரித்தால்உடனே அவர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+