For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த மண்ணில் கலாம்: அண்ணனைக் கட்டித் தழுவி ஆசி பெற்றார்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரான பிறகு முதல் முறையாக அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாம் தன்னுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்குச் சென்றார்.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு தான் பிறந்து வளர்ந்த ராமேஸ்வரத்துக்கு அவர் வந்த போது, பாம்பனிலிருந்துராமேஸ்வரம் வரையிலான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டுநின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

காட்டுப் பிள்ளையார் கோவிலின் அருகே பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள்உற்சாகம் கரைபுரண்டோட திரண்டு நின்று கலாமை வரவேற்றனர்.

அவர்களைக் கண்டதும் காரிலிருந்து இறங்கிய கலாம் அந்த மாணவிகளிடம் சிரித்து பேசி மகிழ்ந்தார்.அவர்களுடைய படிப்பு குறித்தும் அக்கறையுடன் விசாரித்தார்.

பின்னர் பள்ளிவாசல் தெருவில் உள்ள அவருடைய பிறந்த வீட்டுக்குச் சென்றார். அந்தத் தெருவிலும்நூற்றுக்கணக்கானவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் அணிவித்த மாலைகளையும்சால்வைகளையும் அன்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் ஏற்றுக் கொண்டார் கலாம்.

பின்னர் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்ததும், கலாமை அவருடைய அண்ணன் முகம்மது முத்து மீரான்மரைக்காயர் கட்டித் தழுவிக் கொண்டார்.

அதன் பிறகு அண்ணனிடம் ஆசி பெற்ற கலாம், அங்கிருந்த தன்னுடைய உறவினர்களிடம் பேசினார். தன்னுடையமதிய உணவையும் அங்கேயே சாப்பிட்டார் கலாம்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய பழைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற கலாம், அவர்களிடம்பேசிக் கொண்டே தான் படித்த பள்ளி உள்பட பல பகுதிகளையும் சென்று பார்த்தார்.

"வியர்வை சிந்துங்கள், வெற்றி நிச்சயம்":

முன்னதாக ராமேஸ்வரத்திற்குக் கிளம்புவதற்கு முன் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு கலாம்சென்றிருந்தார்.

அந்தக் கல்லூரி மாணவர் ஒருவரிடம் அவர் பேசும் போது,

நாம் கனவு கண்டால் எண்ணங்கள் வரும். அந்த எண்ணங்கள் நிறைவேறினால் செயல்கள் பிறக்கும். செயல்கள்பிறந்தால் வெற்றி நிச்சயம்.

வளர்ந்து வரும் நம் நாடு வளம் பெறும் நாடாகவும் மாறும். வியர்வை சிந்தி உழைத்தால் இந்த வெற்றி நமக்குநிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்.

அதன் பின்னர் ஏராளமான போலீஸ் கார்கள் தன்னுடைய பாதுகாப்புக்காக வருவதைக் கண்ட கலாம், என் சொந்தஊர் மிகவும் சிறியது. இவ்வளவு கார்களுக்கு அந்த ஊரில் இடமிருக்காது. எனவே ஒரே ஒரு காரில் மட்டும்போலீசாரை அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X