ராசிபுரத்தில் ஒற்றைக் காலில் நின்று போராட்டம் நடத்திய பாமகவினர்
Subscribe to Oneindia Tamil
ராசிபுரம்:
ராசிபுரம் நகரில் துப்புரவுப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து அந்நகர பாமக தொண்டர்கள்ஒற்றைக் காலில் நின்று கொண்டு போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம் நகராட்சி ஊழியர்கள் தெருக்களை சரியாகச் சுத்தம் செய்வதில்லை. அங்குள்ள சாக்கடைகளையும்ஒழுங்காகச் சுத்தம் செய்வதில்லை. மேலும் குப்பைகளையும் அகற்றும் பழக்கமே கிடையாது.
இவ்வாறு அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டிய பாமகவினர் இவற்றை எதிர்த்து நூதனப் போராட்டம் நடத்த முடிவுசெய்தனர்.
அதன்படி அந்நகரின் மையப் பகுதியில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு அவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
ஒற்றைக் காலில் நின்று கொண்டு போராட்டம் நடத்திய பாமகவினரை அப்பகுதி மக்கள் வினோதமாகப் பார்த்துக்கொண்டே சென்றனர்.












Click it and Unblock the Notifications