இந்தியா வருகிறார் காலின் பாவெல்
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்காக அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவெல் இம்மாத இறுதியில் மீண்டும் இந்நாடுகளுக்குப் பயணம்மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல்நடத்தியதைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பதற்றம் தலை தூக்கியது.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர்வெடிக்கலாம் என்ற சூழ்நிலை உருவானது.
அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்த இரு நாடுகளும் மோதிக் கொண்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றுகருதிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டுத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக தெற்காசியாவுக்குப் பயணம்செய்து பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவ்வகையில் காலின் பாவெல்லும் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வருகை தந்து, இருநாட்டுத் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து ஓரளவு பதற்றம் குறைந்த போதிலும் கடந்த மே 14ம் தேதி காஷ்மீரில் ஒரு பயணிகள் பஸ்சையும்ராணுவ முகாமையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் பயங்கரமாகத் தாக்கி 39 பேரைச் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து எல்லையில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்து கொண்டது. இந்த முறை இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் இடையே நிச்சயம் போர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவும் எல்லைகளில் படைகளைக் குவிக்க ஆரம்பித்தது. கிழக்குக் கடற்கரையில் உள்ள போர்க் கப்பல்கள்எல்லாம் மேற்குக் கரை நோக்கி நகர்ந்து வந்து, கட்ச் வளைகுடாப் பகுதியில் பாகிஸ்தானை நோக்கி நிறுத்தப்பட்டன.
இதையடுத்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் மீண்டும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வந்து சமரசமுயற்சிகளில் ஈடுபட்டனர்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்ட் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சரானரிச்சர்டு ஆர்மிடேஜ் ஆகியோர் தெற்காசியாவுக்கு வந்து சென்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம்வெகுவாகக் குறைய ஆரம்பித்தது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவெளிப்படையாகவே அந்நாட்டைக் குற்றம் சாட்டிப் பேசியது.
இதற்கிடையே இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் துணைப் பிரதமர் அத்வானிஆகியோர் எல்லையில் இன்னும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர் என்றுஅடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் காலின் பாவெல் மீண்டும் இந்த மாத இறுதியில் தெற்காசியப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமும் பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பிடமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல மணி நேரம் தொலைபேசியில்பேசியதாக காலின் பாவெல் தெரிவித்தார்.
ஆனால் அவர் வருவதற்கான தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக ஜூலை 30 அல்லது31ம் தேதி காலின் பாவெல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications