துணை ஜனாதிபதி: வேட்பாளர்களை முடிவு செய்யாத கட்சிகள்
டெல்லி:
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
இப்போதுள்ள துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தப்பதவிக்கு பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரான பைரோன் சிங் செகாவத், மேற்கு வங்கஆளுநரான தொழிலதிபர் வீரேன் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
பா.ஜ.க. யாரை நிறுத்தினாலும் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, மோதிலால் வோரா, ராஜ்யசபைத் துணைத் தலைவர் நஞ்மா ஹெப்துல்லாஆகியோரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
ஆனால், இரு கட்சிகளும் வேட்பாளரை இன்னும் ஒரு முடிவு செய்யவில்லை.
இந் நிலையி துணை ஜனாபதி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. வேட்பு மனுத் தாக்கலும் இன்றேதொடங்குகிறது. இம் மாதம் 24ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
லோக்சபாவின் செயலாளர் ஜி.பி. மல்ஹோத்ராவிடம் இந்த வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவைத் தாக்கல்செய்பவரின் பெயரை 20 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும்.
துணை ஜனாதிபதியை லோக்சபா, ராஜ்யசபாவைச் சேர்ந்த 790 எம்.பிக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும்நடந்து முடிவும் அறிவிக்கப்படும்.