மூத்த அதிகாரிகளுடன் ஜெ. மீண்டும் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைகோ கைது மற்றும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று கோட்டையில்ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலையும் இதே போன்ற ஆலோசனையை ஜெயலலிதா நடத்தினார். அப்போது சிவகாசி எம்.பியாக உள்ள வைகோ கைது குறித்துலோக்சபா சபாநாயகர் மனோகர் ஜோஷியிடம் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கோட்டையில் நேற்றும் இன்று காலையும் நடந்த இந்த இரு கூட்டங்களிலும் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், உள்துறைச் செயலாளர்நரேஷ் குப்தா, காவல்துறை டி.ஜி.பி. நெயில்வால், பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, உளவுப் பிரிவு ஐ.ஜி. வெங்கடகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதிமுகவினர் கைது, சிறைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து ஜெயலலிதாஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications