வைகோ கைதுக்கு பா.ஜ.க., ராமதாஸ் எதிர்ப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது குறித்து இன்று காலை நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்வதன் மூலம் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டவுள்ளது. பேச்சு சுதந்திரத்துக்குஎதிரான வன்முறைச் செயல் இது.
ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதற்கும், அவர்களுக்கு உதவி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்குஆதரவான கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றமே சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில் அந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கோருகிறது. புலிகளை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தமிழர்களின்பிரச்சனையை தீர்த்துவிட முடியாது.
சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறி சிவகாமி வின்சென்ட், முருகவேல்ராஜன் ஆகிய இருஎம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடருவோம் என்றார் ராமதாஸ்.
பா.ஜ.க.:
இதே போல பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயாளரும் செய்தித் தொடர்பாளருமான அருண் ஜேட்லியும் இந்த கைதுக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளார். ஒரு தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக தான் பேசிய பேச்சு குறித்து வைகோ விளக்கம் தந்துவிட்டார்.
இலங்கையில் தான் புலிகளை ஆதரிக்கிறார். தமிழகத்தில் அல்ல. இதனால் அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார்.
பொடாவைப் பொறுத்தவரை அது மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால், பா.ஜ.க. இந்தக் கைதைஎதிர்க்கும்.
இந்தச் சட்டத்தை அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா பயன்படுத்தியிருந்தால் அது குறித்து வைகோ நீதிமன்றத்தில் போராடுவார் என்றார்ஜேட்லி.
-->












Click it and Unblock the Notifications