அகதிகளை தவிக்க விட்ட இலங்கை.. காப்பாற்றிய இந்தியப் படை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தவிக்க விடப்பட்ட அகதிகளை இந்திய கடலோரக் காவல் படை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தது.

யாழ்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த 6 அகதிகள் ஒரு படகில் ராமேஸ்வரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களைஇலங்கைக் கடற்படை வழிமறித்தது. பின்னர் தனுஷ்கோடியில் இந்திய கடல் பகுதியில் நுழைந்த இலங்கைக் கடற்படையினர் இந்தஅகதிகளை இரண்டாம்திட்டை என்ற சிறிய தரைப் பகுதிக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

பின்னர் அவர்களின் படகையும் எடுத்துக் கொண்டு நடுக்கடலில் தவிக்க விட்டுவிட்டு இலங்கை கடற்படையினர் சென்றுவிட்டனர்.

இதனால் நேற்று இரவு முழுவதும் இந்த 6 அகதிகளும் கடும் குளிரிலும், சூறாவளிக் காற்றிலும் அந்தக் குட்டித் தீவில் தங்கியிருந்தனர்.

இந் நிலையில் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படையினர் இந்த 6 பேரும் தீவுப் பகுதியில் அரை மயக்கத்தில்இருப்பதைக் கண்டு அவர்களை மீட்டனர். தங்கள படகில் உணவையும் முதலுதவியும் தந்த கடலோரக் காவல் படையினர் இவர்களைமண்டபம் அகதி முகாமில் கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்தியக் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஊடுருவது அதிகரித்து வருவதாக உளவுப் பிரிவினர் மத்திய அரசிடம்தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

வைகோ கைது காரணமாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நடமாட்டம்,செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க மாநில போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+