For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதி அரேபியாவில் இந்தியர் தலை துண்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஜெட்டா:

சவுதி அரேபியாவில் மூன்று பெண்களைக் கொலை செய்த இந்தியரின் தலை துண்டிக்கப்பட்டது.

ஷானாஸ் பாபு முகம்மத் அலி என்ற அந்த இந்தியர் சவுதி அரேபியாவில் 3 வீடுகளில் கொள்ளையடித்தாகவும், அப்போது அவரைப்பிடிக்க வந்த அந்த வீடுகளின் பெண்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரது தலையை துண்டிக்க இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜெட்டா நகரில் அவர்தலையை வெட்டிக் கொல்லப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 24 பேர் சவுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்கு அங்கு தலை துண்டிப்புதண்டனை தரப்படுகிறது.

பொது மக்களின் கண் முன்னால் வாளைக் கொண்டு தலை துண்டிக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X