ஜாமீன் கேட்கவே மாட்டேன்: வைகோ திட்டவட்டம்
வேலூர்:
பொடாவில் கைது செய்யப்பட்டுள்ள நான் எக்காரணம் கொண்டும் ஜாமீன் கோர மாட்டேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.
வேலூர் சிறை வாசலில் நிருபர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டம் பொடா. இதை என்மீது ஏவியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழக மக்கள் தான் ஜெயலலிதாவை முதல்வாக்கினார்கள். நான் மக்களிடமே இந்த விவகாரத்தைக்கொண்டு செல்வேனே தவிர, ஜாமீன் கேட்க மாட்டேன். மாட்டேன்.
என் மனசாட்சிக்கு சரி என பட்டதை, நியாயமாகப் பட்டதைத் தான் செய்து வந்திருக்கிறேன். பேசி வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் அமைதியை நிலை நாட்ட ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் போல ஜெயலலிதா பேசுகிறார். வழக்கறிஞர்களை வீடு புகுந்துதாக்கி கை, கால்களை உடைத்தது யார்? தர்மபுரியில் மாணவிகளை பஸ்ஸில் வைத்து எரித்தது யார்?
தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் எங்களை விட அக்கரை ஜெயலலிாவுக்கு இருந்துவிட முடியாது. ஜெயலலிதா ஏதோதமிழக அமைதிக்காக பிறந்து வந்தவர் போல பேசுவது நகைப்புக்குரியது.
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசே விடுதலைப் புலிகளோடு பேசுகிறது. எனவே, ஈழத் தமிழர்களைப் பற்றி பேசினால்புலிகளைப் பற்றி பேசமால் இருக்க முடியாது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications