வைகோவைக் காண வழியெங்கும் காத்திருந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

மதுரை சிறையில் இருந்து வேலூர் கொண்டு வரப்பட்ட வைகோவுக்கு வழி முழுவதும் மக்கள் திரண்டிருந்து ஆதரவு தெரிவித்தனர்.

பல இடங்களிலும் சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று அவரைக வழியனுப்பினர். வைகோவும் பல இடங்களில் மக்களைப்பார்த்து கையசைத்தார்.

ஆனால், அந்த போலீஸ் வேனில் ஜன்னல்களில் இரும்பு வலை போடப்பட்டிருந்தால் வைகோவை மக்களால் சரியாகப் பார்க்கமுடியவில்லை.

முன்னால் 2 போலீஸ் ஜீப்கள் சைரன் ஒலித்துக் கொண்டு செல்ல மூன்றாவதாக ஒரு போலீஸ் வேன் செல்ல 4வது வாகனமாக வைகோவின்வேன் சென்றது.

டிரைவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் எந்த போலீசாருடனும் பேசவில்லை. மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார்.அவருடன் இருக்கையில் யாரும் அமரவும் இல்லை. அவருக்கு பின் இருக்கைகளில் தான் போலீசார் அமர்ந்திருந்தனர்.

வைகோவின் வேனுக்குப் பின்னால் 3 வேன்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் சென்றனர். திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் குளித்துவிட்டுகாலை உணவருந்திய வைகோவுக்கு போளூரில் மதிய உணவு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிகாக்கோவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்து உடனே வேனில் மதுரை சென்று அங்கிருந்து உடனே வேலூர் கொண்டுசெல்லப்பட்டார் வைகோ. ஆனால், முகத்தில் களைப்போ, கவலையோ இல்லாமல் இருந்தார். கிட்டத்தட்ட 57 மணி நேரம் தொடர் பயணம்செய்துள்ளார். போலீஸ் வேனில் தொடர்ந்து 20 மணி நேரம் 900 கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+