மதிமுகவுக்குத் தடை: ஜெயலலிதாவுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுகவைத் தடை செய்யும் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், மதிமுகவைத் தடை செய்யப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளதைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு இப்போது கட்சியையே தடை செய்யப் போவதாக ஜெயலலிதா மிரட்டுகிறார்.
முதலில் பொடா சட்டத்தையே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இதற்கு மதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளகட்சிகள் கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications