அடுத்து வைகோ என்ன செய்யலாம்?
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜாமீனில் வெளியே வர முடியுமா என்பது குறித்து பல்வேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
தன்னை பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது தவறு என்று வைகோ வழக்கு தாக்கல் செய்தால் இதற்காக ஒரு மறு ஆய்வுக்கமிட்டியை அரசு அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டியின் தலைவராக நீதிபதி இருப்பார். இந்தக் கமிட்டி விசாரணை நடத்திவைகோவை பொடாவில் கைது செய்தது சரியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.
அல்லது பொடா சட்டத்தின் உட் பிரிவுகளைச் சுட்டிக் காட்டி ஜாமீன் கோர முடியும்
இதையும் தவிர இன்னொரு வழியும் உள்ளது. அது மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடுவது. தமிழக அரசு அரசியல்பழிவாங்கல் காரணமாக இந்தக் கைதை செய்திருப்பதாக மத்திய அரசு கருதினால், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து வேறொருமாநிலத்தின் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மத்திய அரசே கோரிக்கை வைக்கலாம். இது தொடர்பாக மத்திய அரசேவழக்கும் தொடரலாம்.
எப்படி இருந்தாலும் 28 நாள் சிறை வாசத்துக்குப் பின்னரே அவர் ஜாமீன் கோர முடியும்.












Click it and Unblock the Notifications