நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் தீவிர ஏற்பாடுகள்
டெல்லி:
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் பதவிக் காலம் இம் மாதம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து இம்மாதம் 15ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. எம்.பிக்கள் லோக்சபாவிலும் எம்.எல்.ஏக்கள் அந்தந்த மாநிலசட்டசபைகளிலும் வாக்களிக்கலாம். சட்டசபைகளில் வாக்களிக்க விரும்பும் எம்.பிக்கள் தேர்தல் கமிஷனிடம் அதற்கான முன்அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்ஆகியோர் உள்பட 8 எம்.பிக்களும் சட்டசபையில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபையின் சட்டமன்றக் குழு அலுவலகத்தில் இந்த வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும். இதன் பின்னர் இந்த வாக்குப் பதிவு எந்திரம் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்படும்.
வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்கான பார்வையாளராக மத்திய உள்துறைஅமைச்சக செயலாளர் சுரேந்திர நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயககக் கூட்டணி, காங்கிரஸ், சமாஜ்வாடிக் கட்சி, லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள் உள்ளிட்ட பெரும்பான்மையானவாக்குகள் கொண்ட கட்சிகளின் ஆதரவுடன் டாக்டர் அப்துல் கலாமும், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் கேப்டன் லட்சுமி செகலும்போட்டியிடுகின்றனர்.
அப்துல் கலாமின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந் நிலையில் மனு தாக்கல் செய்துவிட்டு கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் பள்ளிகளில் சுற்றுப் பயணம் செய்து வந்த அப்துல் கலாம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அடுத்தமுறை ஜனாதிபதியாகத் தான் அவர் தமிழகம் வருவார்.












Click it and Unblock the Notifications