ஜெயலலிதாவின் கைது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் கைது செய்யப்படுவேன் என்ற ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் எனபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் ஏரிகள் தூர் வாரும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மதிமுகவை தடைசெய்ய முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
முதலில் வைகோவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளைகளை ஜெயலலிதாதடுத்து நிறுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களை திசை திருப்புவதற்காக எதிர்க் கட்சியினர் மீது பாய்ச்சல் காட்டி வருகிறார்.
புலிகளை ஆதரித்துப் பேசினால் என்னையும் கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சும்ஆள் நான் அல்ல என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications