தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம்: இந்தியா புகார்
ஜம்மூ:
ஜம்மூவில் தீவிரவாதிகளால் 27 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா கூறினர். இந்தச்சம்பவத்தை பிரிட்டன் மிக வன்மையாக கண்டிப்பதாகவும், இவர் வரும் 19ம் தேதி இந்தியா வர உள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த ஸ்ட்ரா இந்தியா வரும் நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
இந் நிலையில் காஷ்மீரில் நடந்துள்ள தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு தான் காரணம் என வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாகூறியுள்ளார். பிரதமரின் இல்லத்தில் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தாக்குதல்பாகிஸ்தானின் தூண்டுதால் தான் நடந்துள்ளது என்றார்.
இதே கருத்தைத் தான் உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமியும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications