பொடா சட்டத் திருத்தம்: பிரதமரின் முடிவுக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை:
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அதில் திருத்தங்கள் கொண்டு வர தேசிய ஜனநாயக முன்னணி முடிவுசெய்திருப்பததை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வைகோவை தமிழக அரசு கைது செய்திருப்பதாகக் கூறியுள்ள தேசிய ஜனநாயக முன்னணி,இனிமேல் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க சட்டத்தைத் திருத்தவும் முடிவு செய்துள்ளது.
நேற்று பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முரசொலி மாறன், ஜஸ்வந்த் சிங்,யஷ்வந்த் சின்ஹா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பிரநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
நேற்று பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம். அந்தச்சட்டத்தில் திருத்தங்கள் மிக அவசியமாகிறது. அப்போது தான் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும் என்றார்.
பொடா சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று அந்தச் சட்டத்தை ஆதரிக்கும்போதே நாங்கள்குறிப்பிட்டோம். பொடா சட்டத்தின் கீழ் மதிமுகவை தடை செய்வது குறித்து அத்வானியும், பா.ஜ.கவும் வெவ்வேறு கருத்துக்களைதெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் அத்வானி தான் விளக்கம் தர வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை:
இந் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகணணு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், வைகோவைக் கைது செய்துள்ள ஜெயலலிதா வன்முறையைத் தூண்டும் பஜ்ரங் தள், விஸ் ஹிந்து பரிஷத் போன்றஅமைப்புகளை தடை செய்யத் தயாரா?. பொடா சட்டத்தை ஆதரிக்காதீர்கள் என்று பலமுறை அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால், அதை மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.
புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய ஒரே காரணத்துக்காக வைகோவை கைது செய்திருப்பது சரியல்ல. அரசியல்ரீதியில் வைகோவைபழிவாங்கத் தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications