பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடியது
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
பெடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது, காஷ்மீரில் நடந்த அப்பாவிகள் படுகொலை, கிழக்கு ரயில்வே மண்டலத்தைஇரண்டாகப் பிரிப்பது போன்ற பிரச்சனைகள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன.
வைகோ கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சியினரும் பிரச்சனையைக் கிளப்புவார்கள் என்று தெரிகிறது.இதையடுத்து பொடா சட்டத்தில் இந்தக் கூட்டத் தொடரிலேயே திருத்தம் கொண்டு வரப்படவும் வாய்ப்புள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று காஷ்மீரில் 27 அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்தும், பொது மக்கள் கொலைகளைத் தடுக்கஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் துணைப் பிரதமர் அத்வானி இன்று அறிக்கை தாக்கல் செய்ய இருந்தார். ஆனால், ஜனாதிபதிதேர்தலையொட்டி இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அத்வானி நாளை தான் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்வார்.
நேற்று முன் தினம் இரவு ஜம்மூவில் நடந்த 27 பொது மக்கள் படுகொலைக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதஅமைப்பு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.