அலுமினியத் தட்டில் சாப்பிடும் வைகோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அலுமினியத் தட்டு மற்றும் டம்ளரையே உபயோகித்து வருகிறார்.
அவர் விரும்பினால் சில்வர் தட்டு, டம்ளரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எல்லா கைதிகளைப் போலவே தனக்கும் அலுமினியத்தட்டே போதும் என சிறை அதிகாரிகளிடம் வைகோ கூறிவிட்டார்.
அதே போல நேற்று அவருக்கு அசைவ உணவு வழங்க சிறை நிர்வாகம் முன் வந்தது. ஆனால், எனக்கு சைவ உணவே போதும் எனவைகோ கூறிவிட்டார்ய இதையடுத்து சாதம், சாம்பார், கீரை, ரசம், மோர் ஆகியவற்றையே அவர் அருந்தி வருகிறார். முட்டை கூடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
பகலில் அவரது அறையின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு அந்தக் கதவு பூட்டப்பட்டு விடுகிறது. இன்னுடன் அவர் சிறைசென்று 4 நாட்களாகிறது.












Click it and Unblock the Notifications