வைகோ கைது குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசுவேன்: ராமதாஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டசுடன் பேசப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பா.ம.கவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணியில் இல்லத்தில் நடைபெற்றது. இதில் 17பா.ம.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை இருந்தும் கூட அதை மதிக்காமல் முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண்டுள்ளனர். வைகோவைக் கைது செய்துள்ளது குறித்தும் அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவேன்.
வைகோவை 30 மணி நேரம் போலீஸ் வேனில் ஏற்றி அலைகழித்துள்ளனர் போலீசார். அவருக்கு பேன் கூடத் தராமல் சிறையில்கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
எங்கள் கட்சியை உடைக்க அதிமுக தொடர்ந்து முயன்று தோல்வி கண்டு வருகிறது. எங்கள் கட்சியில் இருந்து விலகிய சிவகாமிவின்சென்ட், முருகவேல் ராஜன் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தும் எந்தப் பலனும்ஏற்படவில்லை.
இதனால், சபாநாயகருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications