சிதம்பரம் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழா: பக்தர்கள் குவிந்தனர்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
சிவபெருமான் நடனக் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த நடராஜர் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இக் கோவிலின் ஆனித் திருமஞ்சனவிழாவில் பங்கேற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமானபக்தர்கள் நடராஜர் ஆலயத்தில் கூடியுள்ளனர்.
கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்த ஆனித் திருமஞ்சன விழா நடக்கிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழாநடந்தது.
இந் நிகழ்ச்சியையொட்டி இன்று காலை நடராஜருக்கும், சிவகாம சுந்தரி தாயாருக்கும் மகா அபிஷேகம் நடந்தது.












Click it and Unblock the Notifications