For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரம்: தஞ்சாவூரில் 2,000 விவசாயிகள் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

காவிரி ஆணையத்தை பிரதமர் வாஜ்பாய் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கோரியும், காவிரியில் தண்ணீர் பெற தமிழக அரசுமுயற்சி செய்ய வேண்டும் என்று கோரியும் தஞ்சாவூரில் சுமார் 2,000 விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

கபினி அணையில் இருந்து கர்நாடகம் நேற்று முன் தினம் சிறிது தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. ஆனால், இது போதுமானதாகஇல்லை.

தஞ்சாவூரில் இன்று நடந்த இந்த உண்ணாவிரதத்தில் நாகப்பட்டினம், திருச்சி, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்தவிவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாயிப் பிரிவினரும் இந்தப் போராட்டத்தில்பங்கேற்றுள்ளனர்.

இக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, காவிரி ஆணையத்தில் இருந்து தமிழகஅரசு விலகியது தவறு. இதனால் கர்நாடகத்துக்குத் தான் சாதமாகப் போய்விடடது. எனவே, மீண்டும் காவிரி ஆணையத்தில்தமிழக அரசு பங்கேற்க வேண்டும்.

உடனே காவிரி நடுவர் மன்றத்தைக் கூட்டக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என்றார்.

காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுத்துவிட்டதால் குறுவை நெல் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள்கைவிட்டுவிட்டனர். நட்ட நாற்றுக்களும் கருகிப் போய்விட்டன.

அடுத்த சம்பா நெல் சாகுபடிக்காவது காவிரியில் நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் இப்போதையேகவலை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X