வைகோவைக் காண பெர்னாண்டஸ், அருண்ஜேட்லி வேலூர் சிறை வரத் திட்டம்?
டெல்லி:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்க மத்திய பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டசும், பா.ஜ.க. தேசியச் செயலாளர் அருண் ஜேட்லியும் வேலூர் வருவார்கள் என்று தெரிகிறது.
வைகோ தானாகவே விடுதலையாகிவிடும் வகையில் பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிஅரசு திட்டமிட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு வழியே இல்லாத வகையில் இச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு திமுக, மதிமுக, பா.ம.க.உள்ளிட்ட பல கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் வி.கே. மல்ஹோத்ரா கூறினார்.
ஆனால், வைகோவின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும்போது நீதிமன்றம் கூறும் கருத்துக்களின்படி தான் இச் சட்டத்தில்திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில் இச் சட்டத்தில் திருத்தம் வரப் போவது உறுதியாகிவிட்டது.