பிறந்து 2 நாளான குழந்தைக்கு மூச்சுக் குழாய் ஆபரேஷன்: அரசு டாக்டர்கள் சாதனை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

பிறந்து 2 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தையின் மூச்சுக் குழாயும் உணவுக் குழாயும் ஆபரேஷன் மூலம் தனித்தனியாகப் பிரித்தெடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு அருகே குமாரகிரியைச் சேர்ந்த ராஜகோபால்-பத்ரகாளி தம்பதிக்கு சமீபத்தில்தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையோ பால் குடிக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகவும் திணறியது. இதைக் கண்டு பதறிப் போனபத்ரகாளி டாக்டர்களிடம் கூறினார்.

டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்த போது அதன் உணவுக் குழாயுடன் மூச்சுக் குழா பின்னிப் பிணைந்திருந்ததுதெரிய வந்தது. இதனால் தான் பால் குடிக்கும் போது அது மூச்சு விடுவதற்கு மிகவும் திணறியுள்ளது.

ஆனால் பிறந்து இரண்டே நாட்கள் மட்டுமே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய அந்தத் தனியார்மருத்துவமனை டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அந்தக் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

சுமார் 3 மணி நேரம் இந்த ஆபரேஷனைச் செய்த அரசு டாக்டர்களான சுவாமிநாதன் மற்றும் விஜய சேகர்ஆகியோர் அந்தக் குழந்தையின் மூச்சுக் குழாயுடன் இணைந்திருந்த உணவுக் குழாயைத் தனியாகப் பிரித்துபிரதான உணவுக் குழாயுடனேயே இணைத்து விட்டனர்.

ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+