For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 தலைகள், 3 கால்கள், 2 இதயம், ஒரு சிறுநீரகம்... சென்னையில் பிறந்த அதிசய குழந்தை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

2 தலைகள், 3 கால்கள், 2 இதயம், ஒரு சிறுநீரகம், ஒரு கல்லீரல் மற்றும் ஒரே ஒரு ஆண் உறுப்புடன் சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் இந்தக் குழந்தையை என்ன செய்வது, எப்படிக் காப்பாற்றுவது என்று அதன் பெற்றோர் பரிதவித்தபடிடாக்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை பாடியைச் சேர்ந்த வீரப்பன்-இந்திரா(23) தம்பதிக்குத் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவத்திற்காகக் கடந்த 11ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்திராவை ஸ்கேன் செய்து பார்த்த போதுஇரட்டைக் குழந்தை கருவில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அந்தக் குழந்தைகளின் உடல் உறுப்புகள்வளர்ச்சியடையாமல் இருப்பதையும் டாக்டர்கள் கண்டனர்.

இதையடுத்து ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். கடந்த 12ம் தேதி ஆபரேஷன் நடந்தது.குழந்தைகளும் உயிருடன் வெளியே கொண்டுவரப்பட்டது. அப்போது தான் அது ஒரு குழந்தை என்றும் அதற்கு 2தலைகள், 3 கால்கள், 2 இதயம், ஒரு சிறுநீரகம், ஒரு கல்லீரல் மற்றும் ஒரு ஆண் உறுப்பு இருப்பது தெரிய வந்தது.

குழந்தையை உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதயம் தனித்தனியாக இருந்து எலும்புகளும் இணையாமல் இருந்தால் இந்தக் குழந்தையை இரட்டைக் குழந்தையாக்கி பிரித்துவிடலாம் என்று கூறும் டாக்டர்கள் அடுத்த கட்ட ஆபரேஷனுக்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பிறக்கும் 50 ஆயிரம் குழந்தைகளில் ஒன்று தான் இது போல் ஒட்டிப் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றுகூறப்படுகிறது. மேலும் இவ்வாறு ஒட்டிப் பிறந்த குழந்தைகள் தொடர்ந்து 4 நாட்களாக உயிருடன் இருப்பதேஅதிசயம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தனித் தனியாகப் பிரித்துக் கொடுக்க முடிந்தால் கொடுங்கள். இப்படி இரட்டைத் தலையுடன் உள்ள குழந்தையைவைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று டாக்டர்களிடம் அதன் தாய் இந்திரா பரிதாபமாகக்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X