நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
டெல்லி:
மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட ஒத்தி வைப்புத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் மீது நேற்று முழுவதும் விவாதம் நடந்தது.
நேற்று இரவு வரை நீடித்த இந்த விவாதத்துக்கு துணைப் பிரதமர் அத்வானி பதில் அளித்தார். அவர் பேசுகையில், பாகிஸ்தானைபயங்கரவாத நாடாக அமெரிக்க அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தீவிரவாதம் ஒழியும். எல்லைக்குஅப்பால் இருந்து தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை.
பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை இந்தியா தானாகவே முறியடிக்கும். எங்களுக்ரு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால்,சர்வதே அளவில் தீவிரவாதத்துக்கு அடிப்படையாக இருக்கும் பாகிஸ்தான் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையைஅமெரிக்காவும் மற்ற நாடுகளும் எடுக்கவில்லை என்றார்.
ஆனால், அத்வானியின் பதில் தங்களுக்குத் திருப்தி தரவில்லை என்று கூறி எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்துஒத்தி வைப்புத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படுவதாக சபாநாயகர் ஜோஷி அறிவித்தார்.
எதிர்க் கட்சியினர் இல்லாததால் இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோல்வியடைந்துவிட்டது. முன்னதாக இந்தத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதையடுத்து தனது கட்சி எம்.பிக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பிக்களும்அவையில் இருக்க வேண்டும் என பா.ஜ.க. உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications