மாறன் உடல் நிலையில் முன்னேற்றம்: ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்
டெல்லி:
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்திய வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) சேர்க்கப்பட்டிருந்த மாறன் இன்னும் ஓரிருநாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறனுக்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார் என்று அந்தமருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நெஞ்சு வலி காரணமாக கடந்த திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் மருத்துவமனையில் மாறன் சேர்க்கப்பட்டார்.பிரபல இதய நோய் நிபுணரான கே.கே. தல்வார் தலைமையிலான டாக்டர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைஅளித்தனர்.
மாறன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலையிலேயே சென்னையிலிருந்துஅவருடைய மகன்கள் டெல்லி விரைந்தனர்.












Click it and Unblock the Notifications