வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற காவல் மிருகம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

வீட்டில் தனியே இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

தூத்துகுடி அருகே மேல்தட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மனைவி காளியம்மாள். இருவரும் கூலிவேலை பார்த்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் காளியப்பன் வேலைக்குச் சென்றுவிட்டார். காளியம்மாள் வீட்டில் தனியே இருந்தார். அப்போது தமிழககாவல்துறையின் ஆயுதப் படை பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரரான வன்னியதாசன் என்பவர் காளியம்மாளின் வீட்டுக்குள்புகுந்தார்.

போலீஸ் உடையில் உள்ளே வந்த அந்த நபர் வீட்டை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு காளியம்மாளை பலாத்காரம் செய்தார். பின்னர்தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து காளியம்மாளும் அவரது கணவரும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். முதலில் புகாரை வாங்க காவல் நிலையம்மறுத்தது. உயர் அதிதகாரிகளிடம் புகார் செய்வோம், முதல்வரின் கவனத்துககுக் கொண்டு போவோம் என்று காளியம்மாளின்உறவினர்கள் மிரட்டிய பிறகே அந்தக் காவலர் மீது வழக்குப் பதியப்பட்டது.

முதல்வருக்குத் தெரிவிப்போம் என்று மக்கள் மிரட்டியதால் தவறு செய்த அந்த காமக்கொடூர போலீல்காரரை கைது செய்தனர்.

அவர் மீது ஈவ்- டீசிங் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட வேண்டும் என்றுகாளியம்மாள் தரப்பினர் கோரியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+