தெரு சண்டை போடும் இளங்கோவன்- வாழப்பாடிக்கு சோனியா டோஸ்
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவனும், கட்சியில் சமீபத்தில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் ஒருவரைஒருவர் திட்டி அறிக்கை விட்டு வருவதை காங்கிரஸ் தலைமை கண்டித்துள்ளது.
இருவரும் சேர்த்து கட்சியின் பெயரைக் கெடுப்பதாகவும் மானத்தை வாங்குவதாகவும் டோஸ் விடப்பட்டுள்ளது.
இளங்கோவன் உதவியால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி வழக்கம் போல் தனி கோஷ்டி நடத்தி வருகிறார்.பெரும்பாலும் வன்னியர்களைக் கொண்ட இவரது கோஷ்டி இளங்கோவனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மூப்பனார் காலத்தில் இருந்தே தனியாக கோஷ்டி நடத்தி வரும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் பிற காங்கிரஸ் தலைவர்களுக்கும்எப்போதும் ஒத்துப் போனதில்லை. ஆனால், பிரிந்து கிடக்கும் அனைத்து காங்கிரஸ் கட்சிகளும் இணைய வேண்டும் என்று குரல்கொடுத்து அதற்கான முயற்சிகளிலும் இறங்கி ராஜிவ் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த வாழப்பாடியை மீண்டும் காங்கிரசில்இணைத்தார் இளங்கோவன்.
அதே போல தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க முயற்சி எடுத்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால், மூப்பனாரையும் அவரது கட்சியையும் எப்போதும் விமர்சித்து வந்த வாழப்பாடி இப்போது இந்த இணைப்பை எதிர்த்துபேசி வருகிறார். இதையடுத்து அவருக்கு விளக்கம் கேட்ட நோட்டீஸ் அனுப்பினார் இளங்கோவன்.
ஆனால், சோனியாவுக்கு மிக நெருக்கமான அர்ஜூன் சிங்கின் ஆசி பெற்ற வாழப்பாடி ராமமூர்த்தி அவர் மூலமாக இப்போதுஇளங்கோவனை சோனியாவிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இளங்கோவனை அடக்கி வைக்குமாறு கட்சியின் தமிழக விவகாரங்களை கவனிக்கும் ரமேஷ் சென்னிதலாவுக்குசோனியா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோவனுடன் தொலைபேயில் தொடர்பு கொண்டு பேசிய சென்னிதலா,சோனியாவின் அதிருப்தியை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு கட்சியில் இருக்கும் இன்னொரு மூத்த தலைவருக்கு எதிராக அறிக்கை விடுவது,பேட்டி தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என இளங்கோவனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல வாழப்பாடி ராமமூர்த்தியுடனும் சென்னிதலா பேசினார். கட்சி எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதைவிட்டுவிட்டு வாய்த் துடுக்காக வாசனையும், மூப்பனாரையும் இன்னும் திட்டிக் கொண்டிருப்பது தவறு என்று வாழப்பாடியிடம்எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை இருவரும் பேசித் தீர்க்க வேண்டும் எனவும், டிவி, இன்டர்நெட், பத்திரிக்கை செய்தி நிறுவனங்கள் மூலம்இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி கட்சியின் மானத்தையும், கண்ணியத்தையும் கெடுக்கக் கூடாது என்று இருவருக்கும்சென்னிதலா மூலமாக கட்சித் தலைமை கிளாஸ் எடுத்துள்ளது.
காங்கிரஸ் என்றாலே கோஷ்டியும் சண்டையும் தானே. கோஷ்டி சண்டை இல்லாமல் காங்கிரஸ் ஏது?












Click it and Unblock the Notifications