மாறனுக்கு அடுத்த வாரம் இருதய அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு அறுவை சிகிச்சைநடக்கவுள்ளது.
கடந்த 16ம் தேதி அவர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். இருதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த வாரம்இந்த அறுவை சிகிச்சை நடக்கும்.
அவரது உடல் நிலை நல்லபடியாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications