கடும் மழையால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
ஜம்மூ:
கடுமையான குளிருடன் பலத்த மழையும் பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாகநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 7,000 பக்தர்கள் தங்கள் யாத்திரையைத் தொடர முடியாமல் ஜம்மூவில்தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மிகப் பலத்த பாதுகாப்புடன் கடந்த 19ம் தேதி அமர்நாத் யாத்திரைஜம்மூவில் தொடங்கியது. ஜம்மூவிலிருந்து அமர்நாத் குகை வரை வழி நெடுகிலும் பக்தர்களின் பாதுகாப்புக்காகராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு சிறு குழுக்களாக பக்தர்கள் ஜம்மூவிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 10,297 பக்தர்கள்ஜம்மூவிலிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். சுமார் 7,000 பக்தர்கள் நேற்றும் இன்றும் கிளம்புவதாக இருந்தது.
ஆனால் நேற்று பகல்காமைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குளிருடன் பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.இந்நிலையில் பக்தர்கள் தங்கள் யாத்திரையை மேற்கொண்டால் பல இடங்களில் வழுக்கி விடும் சூழ்நிலைஏற்படலாம்.
இதையடுத்து இந்த 7,000 பக்தர்களின் அமர்நாத் யாத்திரைப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாட்களில் காலநிலை சீரான பிறகு அவர்கள் பயணத்தைத் தொடங்கலாம் என்று பக்தர்களுக்குஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அது வரை பக்தர்கள் ஜம்மூவில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்குவதற்கானஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் சிவ லிங்க தரிசனம்:
இதற்கிடையே கடந்த 19ம் தேதி அமர்நாத் யாத்திரை கிளம்பிய முதல் குழுவினர் 500 பேர் இன்று புனித குகையைஅடைந்தனர்.
பின்னர் அங்குள்ள சிவ லிங்கத்தை தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த சிவ லிங்கம் இயற்கையிலேயேஉருவானதாகக் கருதப்படுகிறது.
யாத்திரையாக வந்த 2வது குழுவைச் சேர்ந்த பக்தர்களும் இன்றைக்குள்ளாகவே சுவாமி தரிசனம் செய்வார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.