டி.ஐ.ஜி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி ரெய்ட்
சென்னை:
பெருமளவில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழக ஊர்க் காவல் படையின் (ஹோம் கார்ட்ஸ்) டி.ஐ.ஜி.ராமநாதன் வீட்டில் இன்று லஞ்ச-ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தினர்.
இவர் திமுக ஆட்சியியில் சேலம் மாவட்ட எஸ்.பியாக இருந்தபோது பல கோடி அளவுக்கு சொத்து குவித்தவர். சேலம் மாவட்டமுன்னாள் திமுக அமைச்சரின் மகனின் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருந்தார். இதனால், அந்த வி.ஐ.பியின் மகன்கோடிக்கணக்கில் பணம் குவித்தார். அவருக்கு உதவியாக இருந்த ராமநாதனும் பெரும் பணக்காரர் ஆனார். பின்னர் செங்கல்பட்டுகிழக்கு மாவட்ட எஸ்.பியாக இருந்தபோதும் ஊழலில் பெரும் சொத்து குவித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டதுண்டு.
ஆனால், திமுக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்ததால் தப்பி வந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரமில்லாதஹோம் கார்ட்ஸ் டி.ஜி.பியாக்கப்பட்டார்.
சென்னையையடுத்து நீலாங்கரையில் கோடீஸ்வரர்கள் கடற்கரையிலேயே வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இங்குராமநாதனுக்கு மிகப் பெரிய பங்களா உள்ளது. காவல்துறை அதிகாரியான இவரது வீடு பல தொழிலதிபர்களின்மாளிகைகளைவிடப் பெரியது.
இந்த வீட்டில் இன்று காலை லஞ்ச-ஒழிப்புப் போலீசார் முற்றுகையிட்டனர். இந்த அதிரடி ரெய்டில் பல கோடி மதிப்புள்ளசொத்துக்கள் குறித்த ஆவணங்களும் லட்சக்கணக்கான பணமும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
தேவைப்பட்டால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு காைதாவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கினறன.












Click it and Unblock the Notifications