சேலத்தில் ஜெயலலிதா: ரூ.232 கோடி நலப் பணிகள் துவக்கம்
சென்னை:
இன்று காலை சேலம் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா சுமார் ரூ.232 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத்துவக்கி வைத்தார்.
சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்குப் புறப்பட்ட ஜெயலலிதா, காலை 11.30மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார்.
பின்னர் சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற விழாவில் ரூ.168.37கோடி மதிப்பிலான 2,439 வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய பின், ரூ.50.91 கோடி மதிப்பிலானபுதிய திட்டங்களையும் துவக்கி வைத்தார்.
அதன் பிறகு ரூ.12.51 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் 10,683 பேருக்கு ஜெயலலிதா வழங்கினார்.
ஜெயலலிதா வருகையையொட்டி சேலம் முழுவதிலும் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவே ஜெயலலிதா மதுரை செல்வதாகத் தான் முதலில்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று மாலையே சென்னை திரும்பும் அவர், நாளை காலை தான் மதுரைக்குக்கிளம்புகிறார்.
மதுரை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் நாளை கலந்து கொள்ளும் ஜெயலலிதா, சுமார்ரூ.125 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அதன் பின்னர் சுமார் 7,400பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications