பொடாவுக்கு எதிராக வழக்கு: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பொடா சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைகளை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் தரக் கோரி மத்தியஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொடா சட்டத்தில் உள்ள 18 பிரிவில் இருந்து 22வது பிரிவு வரை உள்ள விதிகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. இந்தப் பிரிவுகளைக்கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் இந்தச் சட்டத்தை ஏதேச்சதிகாரத்துடன் பயன்படுத்த முடியும். இது இந்திய அரசியல்சட்டத்துக்கு எதிரானது.
தனக்கு ஒத்து வராத அமைப்புகள், தனி மனிதர்கள் மீது அரசுகள் பொடா சட்டத்தைப் பயன்படுத்த இந்தப் பிரிவுகள் வழிவகுக்கின்றன. சமீபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டது இதற்கு ஒரு உதாரணம்.
இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமான இந்த சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என அந்த வழக்கறிஞர் தனது மனுவில்கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய டிவிசன் பெஞ்ச் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications