For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை வளமாக்கவே பிரிக்கும் யோசனை: ராமதாஸ் "பல்டி"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தை வளமாக்கி இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தான் கூறியதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம்அளித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நிர்வாக வசதிக்காகவும் பின் தங்கிய மாவட்டங்களின் மீது தனிக் கவனம் செலுத்துவதற்காகவும் இந்தியாவின் சிலபகுதிகளில் ஏற்கனவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் தான் சமீபத்தில் வட இந்தியாவில்மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

இதே நோக்கத்தின் அடிப்படையில் தான் தமிழகத்தையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற யோசனையைநாங்கள் முன் வைத்தோம்.

ஆனால் நாட்டு நலனுக்கு எதிரானது, தமிழகத்தை பலவீனப்படுத்தி விடும் என்றெல்லாம் என்னுடைய யோசனைகுறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

என்னுடைய இந்த யோசனை தமிழகத்தை பலவீனப்படுத்தி விடும் என்று அஞ்சத் தேவையில்லை. இன்னும்சொல்லப் போனால் சிறிய மாநிலமாக இருந்தால் தான் பிரிவினைவாத சக்திகளை விரைவாக அடக்கி ஒடுக்கமுடியும்.

பின் தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவற்றையும் வளர்ச்சியடையச் செய்துதமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதற்காகத் தான் இந்த யோசனையை நான் தெரிவித்தேன்.

இது நடைமுறையில் சாத்தியமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ராமதாஸ்.

சமீபத்தில் உத்திரமேரூரில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய போது, வன்னியர் ஒருவரை முதல்வராக்கதமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.

அவருடைய இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியவுடன் தமிழகத்தை வளமாக்குவதற்காகத் தான் இந்தயோசனையைக் கூறியதாக அவர் "பல்டி" அடித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X