For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் மீண்டும் அக்னி ஏவுகணை சோதனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அக்னி ஏவுகணையை இந்தியா மீண்டும் விண்ணில் செலுத்தி சோதனையிட உள்ளது. இந்தச் சோதனைக்குப் பின் இந்த ஏவுகணைஇந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிடும் என பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.

ராஜ்யசபாவில் பேசிய அவர், 700 கி.மீ. பாயந்து சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணையின் சோதனைகள் அனைத்தும்முடிந்துவிட்டன. இன்னும் ஒரே ஒரு சோதனைக்குப் பின் அந்த ஏவுகணைக் தொழில்நுட்பம் ராணுவத்தின் வசம் தரப்பட்டுவிடும்.தேவைப்படும்போது, தேவைப்படும் எண்ணிக்கையில் இந்த ஏவுகணைகளை ராணுவம் இனி தயாரித்துக் கொள்ளும்.

கடந்த ஜனவரியில் அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனையிடப்பட்டது. இப்போது 2,500 கி.மீ. தூரம் சென்று தாக்கும்அக்னி-2 தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

அதே போல விமானங்களைத் தாக்கும் திரிசூல், ஆகாஷ் ஏவுகணை தயாரிப்புப் பணிகள் 2003 டிசம்பரில் முடிவடையும்.டாங்கிகளை தாக்கும் நாக் ஏவுகணையை மேம்படுத்தும் பணி 2004 டிசம்பரில் முடிவடையும்.

ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் 2003ல் தயாரிக்கப்பட்டு அடுத்தஆண்டிலேயே ராணுவத்திடம் தரப்பட்டுவிடும்.

டி.ஆர்.டி.ஓவுக்குச் சொந்தமான ஒரு ஆய்வகத்தை முழுக்க முழுக்க ஏவுகணை ஆராய்ச்சிக்காக ஒதுக்கிவிட்டோம். வேறு அரசுஆராய்ச்சி நிலையங்களில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் இந்த ஏவுகணைத் திட்டப் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X