மதுரை மாநகராட்சியில் அதிமுக- கம்யூனிஸ்ட் மோதல்
மதுரை:
மதுரை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம் தொடங்கியதும் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் மகாலிங்கம், முதல்வர்ஜெயலலிதா அவர்கள் நேற்று மேலூரிலே பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார். சுமார் ரூ. 128 கோடி அளவுக்கு திட்டங்கள்நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்கள் மேலூருக்கு மட்டும் தானா? இதில் மதுரைக்கு ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார்.
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் தேவையில்லாமல் பக்கத்து நகரின் நலத் திட்ட உதவிகள் குறித்து கேள்வி எழுப்புவதா என்றுஅதிமுக உறுப்பினர்கள் மகாலிங்கத்தைப் பார்த்து கூச்சலிட்டனர். பதிலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரும் கூச்சல் எழுப்ப இடையில்மற்ற கட்சியினரும் சத்தம்போட மன்றக் கூட்டத்தில் பெரும் குழப்பமும் நிலவியது.
பின்னர் மேயர் தலையிட்டு அனைவரையும் சமாதானப்படுத்தினார்.