For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறிஞ்சிப்பாடியில் பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நேற்றிரவு ஒரு கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக மணிகண்டன் என்பவர் கடந்தஊராட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத ஒரு கும்பல் மணிகண்டனை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள்போன்ற பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தேர்தல் முன் விரோதம் காரணமாகவே இந்தப் படுகொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கும்பலைத் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X