கலாமை அழைத்துச் சென்ற நாராயணன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பதவியேற்பு விழா முடிந்தவுடன் குதிரைப் படை வீரர்கள் முன் செல்ல, இரு புறமும் ராணுவ வீரர்களும் ஜனாதிபதியில் பாதுகாப்புப்படையினரும் அணி வகுத்து நிற்க லிமோசின் காரில் அவர் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனும், ஜனாதிபதி அப்துல் கலாமும் ஒரே காரில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர்.
அங்கு ராணுவத்தினர் கலாமுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட கலாமை, கே.ஆர். நாராயணன் ஜனாதிபதிமாளிகைக்குள் அழைத்துச் சென்றார்.
அங்கு ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளை கலாமுக்கு கே.ஆர். நாராயணன் அறிமுகம் செய்து வைப்பார்.
இதன் பின்னர் கே.ஆர். நாராயணனை அவரது புதிய வீட்டுக்கு அப்துல் கலாம் அழைத்துச் செல்வார்.
நாராயணனுக்காக டெல்லி பிரிதிவிராஜ் சாலையில் அரசு இல்லம் முழு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications