தமிழக அமைச்சரவை கூடியது
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடியது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் வரைமுறையின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்இடித்துத் தள்ளப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
கோயம்புத்தூரில் அனுமதியின்றியும் வரைமுறைகளை மீறியும் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்க சமீபத்தில்சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி இது தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடியது.
கட்டட வரைமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
அமைச்சர்கள் தவிர பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications