டி.ஐ.ஜியிடம் ரூ. 7 கோடிக்கு சொத்து, வைரம், நகைகள்
சென்னை:
ஊர்க் காவல்படையின் டி.ஐ.ஜி. ராமநாதனின் வீட்டில் கடந்த இரு நாட்களாக நடந்த ரெய்டில் அவருக்கு ரூ. 7 கோடி அளவுக்கு சொத்துஇருப்பது தெரியவந்துள்ளது.
டி.ஐ.ஜி. என்ற முறையில் அவரது மாத வருமானம் ரூ. 20,000க் கூட தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரானைட்களால் இழைக்கப்பட்டுள்ள இவரது கடற்கரை பங்களாவின் மதிப்பு மட்டும் ரூ. 3 கோடி என்று தெரியவந்துள்ளது. தவிரவும்லேட்டஸ்ட் ரக கார்கள் பலவும் சொந்தமாக வைத்துள்ளார்.
சேலம் மாவட்ட கமிஷ்னராக இருந்தபோது தான் இவர் பெருமளவில் கொள்ளையடித்தார் என்று தெரிகிறது. அன்றைய திமுக அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவோடு இவர் சுருட்டிய பணம் இது என்று கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுகாள இவரது சென்னை நீலாங்கரை பங்களா, அண்ணா நகர் வீடு, திருவண்ணாமலை வீடு, இவரது மனைவிமனோன்மணி, மகள் சாந்தி ஆகியோரின் பேங்க் லாக்கர்களில் சோதனை நடந்தது. இதில் இவரிடம் ரூ. 7 கோடிக்கு சொத்து இருப்பதுதெரியவந்தது.
வீடுகளில் குளோஸ் சர்க்யூட் கேமரா எல்லாம் அமைத்துள்ளார் இவர். வீட்டின் எல்லா அறைகளும் ஏ.சி. செய்யப்பட்டுள்ளன. லாக்கர்களில்300 பவுன் நகையும், வைரங்களும் இருந்தன.
மும்பையிலும் இவருக்கு சொத்து உள்ளது தெரியவந்தது. செம்பரம்பாக்கம், பரமகுடி, கல்பாக்கம் ஆகிய இடங்களில் நிலங்கள், வீடுகள்உள்ளன.
இவரது மகள் ஒரு டேட்டா என்ட்ரி தொடர்பாக கம்யூட்டர் நிறுவனம் நடத்தி ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications